Entries by cleannationpx

புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலையில் கலந்துரையாடல்

நிர்வாகத்தினராலும் ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் திறன்பட நடாத்தப்பட்டுவரும் புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலையின் எதிர்கால வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்ட கலந்துரையாடல் ஒன்று பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களோடு பாடசாலையில் நடைப்பெற்றது. இந்தக்கலந்துரையாடலில் பாடசாலையின் எதிர்காலம் குறித்து மிகத்தெளிவாக பேசப்பட்டதோடு, தற்காலத்தில் பாடசாலையில் இருக்கும் தேவைகள்,எதிர்கால திட்டங்கள் மற்றும் நாட்டு சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிலைமைகள் பற்றிய தெளிவான பார்வை ஒன்றும் பாடசாலையின் அதிபர் அன்புக்குரிய ஆசிரியை பெல்ஜியா அவர்களால் தெரிவிக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் இந்த பாடசாலையில் வளர்ச்சியில் […]

புதிய அரசியல்திகளின் தேவை

புதிய அரசியல்திகளின் தேவை பற்றி கல்பிட்டி சொந்தங்களோடு பகிர்ந்துகொண்ட பல விடயங்களில் ஒரு நிமிடத்தை மாத்திரம் உங்களுக்காக பகிர்ந்துகொள்கின்றோம். நம் சமூகத்தின் மாற்றத்தை இலக்குகளாய் சுமந்த தூய தேசத்திற்கான பயணத்தின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. #CleanNation #Puttalam #Kalpitiya VDO Link: https://www.facebook.com/watch/?v=728855991562624

Kalpitiya Hardball Cricket Ground

தனி மனிதர்களால் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவே முடியாது என்ற மனோநிலை நம் சமூகத்தில் ஆழமாக வளர்ந்திருக்கும் ஒரு உண்மையாகும். இந்த சிந்தனையை பொய்பிக்கும் வகையில் கல்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஹலான் அப்துல் ரஸ்ஸாக் Mohamed Haslan அவர்களால் 4 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட ஒரு காட்டுக்காணி, பல கஷ்டத்திற்கும், சதிகளுக்கும் மத்தியில் தனியாக நின்று சட்டப்படி போராடி 5ற்கும் மேற்பட்ட கிரிக்கட் கடினப்பந்து விளையாட்டுக்கழகங்கள் பயிற்சி பெரும் (Kalpitiya Hardball Cricket Ground) மைதானமாக மாற்றியமைக்கப்பட்டது. […]

புத்தளம் கொழும்பு முகத்திடலில் அராஜக அரசுக்கெதிரான போராட்டம்

புத்தளம் கொழும்பு முகத்திடலில் அராஜக அரசுக்கெதிரான போராட்டத்தின் 50வது நாள் வரும் வெள்ளிக்கிழமை வருவதால், புத்தளம் மக்களின் முழுமையான பங்குபற்றுதளோடு போராட்டம் வேறு வடிவம் எடுக்கின்றது. நீங்களும் உங்கள் நண்பர்களோடு சென்று, உங்கள் வன்முறையாற்ற எதிர்ப்பினை தெரிவிக்கலாம். පුත්තලම සහ කොළඹ අරාජික රාජ්‍යයට එරෙහි අරගලයේ 50 වැනි දිනය සිකුරාදාට යෙදෙන හෙයින් පුත්තලම ජනතාවගේ පූර්ණ සහභාගීත්වයෙන් අරගලය වෙනස් මුහුණුවරක් ගනිමින් තිබේ. ඔබටත් ඔබේ මිතුරන් සමඟ ගොස් ඔබේ […]

சிங்கள மொழியில் வெளிவரும் “எக்ஸத்” என்ற பத்திரிக்கைக்கு தேவையான நிதி பங்களிப்பு

இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் நம் சமூகத்தினரால் வெளியிடப்பட்டு வந்த பத்திரிக்கைகள் நின்றுபோன்றது மிகக் கவலையான விடயமே. அதே நேரம் வெளியாகும் பத்திரிக்கைகள் இன்றைய இளம் சமூகத்தினரையும் உழைக்கும் வர்க்கத்தினரையும், இன்றைய சமூக நிலை குறித்து சிந்திக்க இடம் தராத வகையில், ஆளும் அரசாங்க முதலாளித்துவ ஆதரவு செய்திகளை வெளியிட்டு, நம் சிந்தனைகளை சிதறடிக்கும் பணியை இந்த […]

சட்ட ஆலோசனை மற்றும் சட்டத்தரணிகளுக்கான கொடுப்பனவு உதவி

அதிகார அரசியலை நோக்கி கேள்வியெழுப்பும் வகையிலும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரான சமூக மற்றும் அரசியல் செயல்பாடுகளுக்கு பதிலடி தரும் வகையில், அரசியல் விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கும் அரசியல் இயக்கம் என்ற வகையிலும் நாம் ஒருபோதும் பின்னிற்கப்போவதில்லை. கௌரவத்திற்குரிய நமது பாராளுமன்ற உறுப்பினரின் வீடு மற்றும் காரியாலயம் எரிக்கப்பட்ட சம்பவத்தோடு சம்பந்தப்படாதவர்கள் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டாலோ அல்லது விசாரணைக்காக அழைத்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தாலோ உடனடியாக எங்களது இயக்கத்தினை தொடர்பு கொள்ளுங்கள். அநீதியை எதிர்க்கும் இயக்கம் […]

ஏப்ரல் 8ஆம் போராட்டம் சம்பந்தமான ஊடக அறிக்கை

PRESS RELEASE – 07th of April 2022 நாளை நடைப்பெற இருக்கும் போராட்டம் எமது இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். இந்த போராட்டம் புத்தளம் மாவட்ட இளைஞர் ஒன்றியத்தினால் முழுமையாக ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த இளைஞர் ஒன்றியத்தில் எல்லா அரசியல் கட்சியை மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யும் குழுவில் நமது இயக்கத்தின் அங்கத்தவர்களும் இருக்கிறார்கள், ஆகவே இந்த போராட்டத்தை மக்கள் மயப்படுத்தும் வேலையை நாம் சரியாக […]

உள்ளுராட்சி சபை தேர்தல் சம்பந்தமான அறிவிப்பு

உலகம் விரையும் வேகத்திற்கேற்ப, நம் பிரதேசத்தின் போக்கினை மாற்றப் போகும் இளம் அரசியல்வாதிகளாக நாம் களம் காணப்போகின்றோம். இனியும் கட்சிகளுக்கு வர்ணம் பூசி, சின்னம் காட்டி, வாக்கு கேட்க இடம் கொடுக்கவும் முடியாது, தந்திரக் கட்சிகளுக்கு நம் மண்ணினை அடகு வைக்கவும் முடியாது. இனி நம் மண்ணுக்கான தனித்துவக்கோஷத்தை தனியாக நின்று எழுப்புவதற்கான நேரம். தூய தேசத்திற்கான நேரம். நம் மண்ணில் இருந்து நம் நாட்டை நேசிக்கும் புதிய படையணிக்கு நாம் தலைமை கொடுப்பதற்கான காலம். நேர்மையான […]

வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் உடனான சந்திப்பு

வண்ணாத்திவில்லு பிரதேச சபை என்பது புத்தளம் மாவட்டத்தில் மிக முக்கியமான இயற்கை வளங்களை கொண்ட சபையாகும். 16 உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கும் பிரதேச சபையில் கரைத்தீவு கிராமத்தை சேர்ந்தவர்களே அதிகமாக தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். இவர்களது முக்கிய கடமை அந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதும் பராமரிப்பதுமே. ஆனால் கடந்த இரண்டு சபைகளில் இயற்கை வளங்கள் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டது மாத்திரமல்லாமல், தலைவர் பதவியும் பல்வேறு கட்சிகளின் தலையீட்டினால் நம்மவர்களிடன் இருந்து பறிபோனது கவலையளிக்கின்றது. அதே நேரம் கரைத்தீவு கிராமத்தின் அடிப்படை அபிவிருத்திகள் […]

பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஜே.எம். ரிபாfய் உடனான சந்திப்பு

தூய தேசத்திற்கான அமைப்பினர் புத்தளம் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஜே.எம். ரிபாfய் Ajm Rifai அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள். கடந்த புத்தளம் பிரதேச சபையின் உள்ளுராட்சி தேர்தல்களின் போது பிரதித்தலைவர் பதவியை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட சகோதரர் ரிபாfய் அவர்களின் அரசியல் போராட்டம் தேர்தலில் வெற்றிபெற்றாலும், தேர்தலுக்குப் பின்னால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களால் மற்ற கட்சிக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டதன் மூலம் தோல்வியடைந்தது என்பதை அத்தேர்தலில் முழுமூச்சாக […]