புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலையில் கலந்துரையாடல்

நிர்வாகத்தினராலும் ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் திறன்பட நடாத்தப்பட்டுவரும் புத்தளம் ஸைனப் ஆரம்ப பாடசாலையின் எதிர்கால வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்ட கலந்துரையாடல் ஒன்று பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களோடு பாடசாலையில் நடைப்பெற்றது.
இந்தக்கலந்துரையாடலில் பாடசாலையின் எதிர்காலம் குறித்து மிகத்தெளிவாக பேசப்பட்டதோடு, தற்காலத்தில் பாடசாலையில் இருக்கும் தேவைகள்,எதிர்கால திட்டங்கள் மற்றும் நாட்டு சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிலைமைகள் பற்றிய தெளிவான பார்வை ஒன்றும் பாடசாலையின் அதிபர் அன்புக்குரிய ஆசிரியை பெல்ஜியா அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்தும் இந்த பாடசாலையில் வளர்ச்சியில் Clean Nation தூய தேசத்திற்கான இயக்கம் அக்கறை கொள்ளும் என்றும், தேவையான நேரம் தேவையான உதவிகளை முடியுமான அளவு செய்து தரும் என்றும் உறுதிமொழி கொடுக்கப்பட்டது. கல்வியே நம் சமூக மாற்றத்தின் உயிர்நாடி என்பதால் இந்தக்கலந்துரையாடல் ஒரு நீண்ட பயணத்திற்காக ஆரம்பமாகவும் அமைந்தது.

කළමනාකාරිත්වය, ගුරුවරුන් සහ දෙමාපියන් එක්ව කාර්යක්ෂමව පවත්වාගෙන යනු ලබන පුත්තලම සයින් ප්රාථමික විද්යාලයේ අනාගත සංවර්ධනය පදනම් කරගත් සාකච්ඡාවක් විද්යාලයේ සංවර්ධන සංගමයේ සාමාජිකයින් සමඟ විද්යාලයේදී පැවැත්විණි.
මෙම සාකච්ඡාවේදී පාසලේ අනාගතය පිළිබඳව ඉතා පැහැදිලිව සාකච්ඡා කළ අතර, රටේ පවතින තත්ත්වය හේතුවෙන් විපතට පත් සිසුන්ගේ පාසලේ වත්මන් අවශ්යතා, අනාගත සැලසුම් සහ අධ්යාපනික තත්ත්වයන් පිළිබඳ පැහැදිලි දැක්මක් විද්යාලයේ විදුහල්පති තුමනි. ගුරුවරයා බෙල්ජිය.
පිවිතුරු ජාතිය ව්යාපාරය විසින් මෙම පාසලේ දියුණුව වෙනුවෙන් ඉදිරියටත් කටයුතු කරන බවටත් ඉන්ෂාල්ලාහ් අවශ්ය වේලාවට අවශ්ය සහය ලබා දෙන බවටත් සහතිකයක් ලබා දෙන ලදී. අධ්යාපනය අපගේ සමාජ පරිවර්තනයේ ජීවනාලිය වන බැවින් මෙම සාකච්ඡාව දිගු ගමනක ආරම්භය ද විය.
A discussion based on the future development of Puttalam Zainub Primary School, which is being efficiently conducted by the management, teachers and parents, was held in the school with the members of the school’s development committee.
In this discussion, the future of the school was discussed very clearly, and a clear view of the current needs of the school, future plans and the educational conditions of the students affected by the country’s situation was also conveyed by the principal of the school, Miss Felijiya.
It was promised that the Clean Nation Movement will continue to care for the development of this school, God willing, and will provide the necessary assistance as much as possible at the required time. Since education is the lifeblood of our social change, this discussion was also the beginning of a long journey. #CleanNation #2025 #Puttalam #Education #Future #Discussion #School #lka

Kalpitiya Hardball Cricket Ground

தனி மனிதர்களால் சமூகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவே முடியாது என்ற மனோநிலை நம் சமூகத்தில் ஆழமாக வளர்ந்திருக்கும் ஒரு உண்மையாகும்.
இந்த சிந்தனையை பொய்பிக்கும் வகையில் கல்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஹலான் அப்துல் ரஸ்ஸாக் Mohamed Haslan அவர்களால் 4 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட ஒரு காட்டுக்காணி, பல கஷ்டத்திற்கும், சதிகளுக்கும் மத்தியில் தனியாக நின்று சட்டப்படி போராடி 5ற்கும் மேற்பட்ட கிரிக்கட் கடினப்பந்து விளையாட்டுக்கழகங்கள் பயிற்சி பெரும் (Kalpitiya Hardball Cricket Ground) மைதானமாக மாற்றியமைக்கப்பட்டது.
அரசை ஏமாற்றி, அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து, லஞ்சம் கொடுத்து அரச காணிகளை அபகரிக்கும் ஊழல் நிறைந்த கயவர்களுக்கு மத்தியில், சமூகத்திற்காக இப்படியான ஒரு நற்செயலை அல் ஹமாஸா விளையாட்டுக்கழகத்தின் ஆரம்ப ஊக்குவிப்போடு செய்த Clean Nation தூய தேசத்திற்கான கல்பிட்டி பிரதேச தலைவர்களில் ஒருவரான சகோதரர் ஹலான் அப்துல் ரஸ்ஸாக் பாராட்டிடப்பட வேண்டியவரே.
அந்த வகையில் தன் தனி முயற்சியால் உருவான அந்த பொது மைதானத்தில் விளையாடும் அனைத்து விளையாட்டுக் கழகங்களுக்காக தூய தேசத்திற்கான அரசியல் இயக்கம் மூலமாக சில உதவிகளை செய்ததும் குறிப்பிடத்தக்கது. #Kalpitiya #CleanNation #Vision #NewLeaders

ஏப்ரல் 8ஆம் போராட்டம் சம்பந்தமான ஊடக அறிக்கை

PRESS RELEASE – 07th of April 2022

நாளை நடைப்பெற இருக்கும் போராட்டம் எமது இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை தெளிவாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம். இந்த போராட்டம் புத்தளம் மாவட்ட இளைஞர் ஒன்றியத்தினால் முழுமையாக ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த இளைஞர் ஒன்றியத்தில் எல்லா அரசியல் கட்சியை மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள்.

இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யும் குழுவில் நமது இயக்கத்தின் அங்கத்தவர்களும் இருக்கிறார்கள், ஆகவே இந்த போராட்டத்தை மக்கள் மயப்படுத்தும் வேலையை நாம் சரியாக செய்திருக்கிறோம். தொடர்ந்தும் செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

ஏனைய சமூக அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் தங்களுடைய பெயரை முன்னிறுத்தி இந்த போராட்டத்திற்கு அழைப்புவிடுக்க முடியாது என்பதற்காக, நாம் இந்த போராட்டத்தை எங்களுடைய அமைப்பின் உறுப்பினர்களையும் எம்மை மதிக்கும் இயக்க ஆதரவாளர்களையும் அழைக்க முடியாது என்று எவருக்கும் சொல்ல முடியாது.

சமூக வலைத்தளத்திலும், சமூக ஊடகத்திலும் எமது அழைப்பிற்கு வித்தியாசமான வியாக்கியானம் கொடுப்பவர்கள் எங்கள் இயக்கத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களாகவோ அல்லது எம் அரசியல் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாதவர்களாகவோ அல்லது இந்த போராட்டத்தின் அடிப்படையை புரியாதவர்களாகவோ தான் இருக்கிறார்கள். இவர்களுக்காக நாம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எங்களால் முடியுமான பங்களிப்பை கொடுக்காமல் இருக்க முடியாது ஆகவே போராட்டத்திற்கான ஏற்பாடுகளை பற்றிய சந்தேகங்களை ஏற்பாட்டு குழுவினை அணுகி (0768551330) அழைத்து அறிந்துகொள்ளலாம்.

ஆகவே இன்று இரவு இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்யும் குழு மக்கள் மத்தியில் சில விஷமிகளால் உருவாக்கப்பட்டிருக்கின்ற சந்தேகங்களுக்கான தெளிவான பதில்களை அறிவிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இன மத மொழி கட்சி பேதமின்றி நடைப்பெற போகும் இந்த போராட்டத்திற்கு நம் இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளை களைந்து இந்த நாட்டை நேசிக்கும் குடிமகனாக கலந்துகொள்வார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே இந்த நாட்டை நேசிப்பவர்களாக எங்களைப்போல கலந்துகொள்ள உங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

எஸ்.எம்.இஷாம் மரிக்கார்
தலைவர்
தூய தேசத்திற்கான இயக்கம்

Press Release 07 April 2022

உள்ளுராட்சி சபை தேர்தல் சம்பந்தமான அறிவிப்பு

உலகம் விரையும் வேகத்திற்கேற்ப, நம் பிரதேசத்தின் போக்கினை மாற்றப் போகும் இளம் அரசியல்வாதிகளாக நாம் களம் காணப்போகின்றோம்.
இனியும் கட்சிகளுக்கு வர்ணம் பூசி, சின்னம் காட்டி, வாக்கு கேட்க இடம் கொடுக்கவும் முடியாது, தந்திரக் கட்சிகளுக்கு நம் மண்ணினை அடகு வைக்கவும் முடியாது.
இனி நம் மண்ணுக்கான தனித்துவக்கோஷத்தை தனியாக நின்று எழுப்புவதற்கான நேரம். தூய தேசத்திற்கான நேரம்.
நம் மண்ணில் இருந்து நம் நாட்டை நேசிக்கும் புதிய படையணிக்கு நாம் தலைமை கொடுப்பதற்கான காலம். நேர்மையான இளம் அரசியல்வாதிகளுக்கான காலம்.
டாக்டர் அப்துல் கலாம் சொன்னது போல, பெரிதாக கனவு காண்கின்றோம், அந்த கனவுகளைத் தூக்கி நிறுத்த உங்கள் முன் வருகின்றோம். நம் மண்ணுக்கான உரிமைகளையும், நம் சமூகத்திற்கான தனித்துவத்தையும், நம் நாட்டுக்கான கௌரவத்தினையும் இன, மத, மொழி பேதமின்றி கரைப்படியாத கொடியொன்றை ஏற்றிட உங்கள் முன் வருகின்றோம்.
புத்தளம் தொகுதியில் இருக்கும் ஐந்து உள்ளூராட்சி சபைகளிலும் தைரியமாய் தனித்து களமிறங்கி, அதிகாரக் கதிரைகளை பெற்றெடுக்க வருகின்றோம்.
அரசியல் எனும் நீதி மையத்தில், மக்கள் எனும் நீதிபதிகளை நம்பி, நேர்மையாய் வருகின்றோம். ஓரத்தில் நின்று ஓய்வெடுக்க நேரமில்லை, போராளிகளே புறப்படுங்கள்! இது நமக்கான நேரம், பெற்றெடுப்போம் சாதிப்போம்.
விடிவு பிறக்குமென
ஆயிரங்களில் வாக்களித்தோம்
பின் பிறந்த விடிவு
பாம்பின் விஷம் என கண்டுகொண்டோம்
நரி ஆண்டு
நகைக்கும் புலி ஆண்ட
காட்டில் இனி
அரி ஆளும் காலம்
வெகு தூரமில்லை
ஏமாந்தோம்
ஏமாற்றப்பட்டோம்
இனி இல்லை ஏமாற்றம்!
https://www.facebook.com/CleanNationLanka/posts/1236006660144364

வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் உடனான சந்திப்பு

வண்ணாத்திவில்லு பிரதேச சபை என்பது புத்தளம் மாவட்டத்தில் மிக முக்கியமான இயற்கை வளங்களை கொண்ட சபையாகும். 16 உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கும் பிரதேச சபையில் கரைத்தீவு கிராமத்தை சேர்ந்தவர்களே அதிகமாக தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். இவர்களது முக்கிய கடமை அந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதும் பராமரிப்பதுமே.
ஆனால் கடந்த இரண்டு சபைகளில் இயற்கை வளங்கள் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டது மாத்திரமல்லாமல், தலைவர் பதவியும் பல்வேறு கட்சிகளின் தலையீட்டினால் நம்மவர்களிடன் இருந்து பறிபோனது கவலையளிக்கின்றது. அதே நேரம் கரைத்தீவு கிராமத்தின் அடிப்படை அபிவிருத்திகள் கூட மந்தமாகிபோன காலமும் இதுவாகவே இருக்கிறது.
குறிப்பாக அருவக்காழு குப்பைத் திட்டத்திற்கு எதிராக என்னதான் மக்கள் எதிர்த்து நின்றாலும், அதற்குரிய அத்தனை பொறுப்பையும் சுமந்து நிற்கும் இச்சபையின் ஒரு சில உறுப்பினர்களை தவிர ஏனைய உறுப்பினர்களும் தலைமையும் பொடுபோக்காவே இருந்துவந்திருக்கின்றது.
சமூக அக்கரையோடு அழுத்தக் குழுக்களாக அமைப்புகளாக சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்கள் முயன்றாலும் அது அரசியல் கட்சிகளின் வித்தைகளால் தவிடுபொடியாவது மட்டுமே எழுதப்படாத விதியா வியாபித்திருக்கின்றது.
ஆகவே அழுத்தக்குழு என்பதற்கு அப்பால் நேரடியாக அரசியலினுள் இறங்கி விளையாட வேண்டிய சூழ்நிலை இளைஞர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
அந்த அடிப்படையில் வருகின்ற 15ஆம் திகதி நடைப்பெற இருக்கும் வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பை தோல்வியடைய வைப்பதற்கான முன்னெடுப்புகளை நம் இளைஞர்கள் Mohamed Atheek அவர்களின் தலைமையில் அரசியல் களத்தில் முன்னின்று செய்து வருகின்றார்கள்.
பிரதேச சபையின் உறுப்பினர்களை சந்தித்து; “மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகின்ற சபை அமர்வில் நடைப்பெற இருக்கும் வரவு செலவு திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் மக்கள் பிரதிநிதிகளாக எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்றும், நாம் இழந்துதவிக்கும் (நாம் கட்டிக்காத்த) சபை தலைவர் பதவியை மீண்டும் பெற்றெடுக்கும் படியும்” இளைஞர்கள் பிரதிநிதிகளிடம் அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.
மக்கள் பிரதிநிதிகள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர, தமக்கு வாக்களித்த மக்களின் உணர்வுகளை புறம் தள்ளி கட்சிகளின் தலைமைகளுக்கு அடிமைகளாய் இருப்பதை உடனடியாக நிருத்தியாகவேண்டுடி இருக்கிறது என்பதை தெளிவாக நம் அமைப்பினர் தெரிவித்தார்கள்.
வருகின்ற சபையின் வரவு செலவு திட்டம் மீதான வாக்குடுப்பில் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து எதிர்த்து வாக்களிப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம்.
වනාතවිල්ලූව ප්රාදේශිය සභාව යනු පුත්තලම දිස්ත්රික්කයේ ඉතා වැදගත් ස්වභාවික සම්පත් සහිත සභාවකි¡ ප්රාදේශිය සභා මන්ත්රීවරු 16 දෙනා අතරින් අධික කාලයක් සභාපති වශයෙන් තනතුරු දැරුවේ කරතීව් ගම්මානය නියොජනය කළ මන්ත්රිවරුය. ඔවුන්ගේ ප්රමුඛතම යුතුකම එම ස්වභාවික සම්පත් ආරකෂා කිරීම හා සංරකෂණ කිරීමයි.
නමුත් පසුගිය සභාධුර කාල දෙකකදී ස්වභාවිත සම්පත් අවහරණයට ලක්වූ අතර සභාපති ධූරය ද විවිධ දේශපාලන පකෂවල මැදිහත් වීමෙන් අපේකෂ ගිලිහී යාම කානගාටු දායක දෙයකි¡ එසේම කරතිීව් ගම්මානයේ මූලික සංවර්ධන පවා මන්දගාමිව හැකි කාලය ද මෙයහි.
විශේෂයෙන්ම අරුක්කාලූ කසළ වියාපෘතියට එරෙහිව ජනතාව නැගී සිටිය ද එසදහා සියළු වගකීම දරා සිටින මෙම සභාවේ සමහර මන්ත්රීවරුන් හැර අනෙකුත් මන්ත්රීවරුන් හා නායකත්වය පවා උදාසීනව සිටිති.
සමාජය කෙරෙහි ඇති උනන්දුව නිසා සලපදම් කණ්ඩායම් ලෙස සමාජයේ දෙන විශාල වෙනසක් ඇතිකිරීමට තරුණ පිරිස උත්සහ කළ ද එය දේශපාලන පකෂවල සෙල්ලම් නිසා විනාශ වීම පමණක් ලියන නොලද ඉරණමක් ලෙස ව්යාප්ත වී ඇත.
එම නිසා බලපෑම් කණ්ඩායමට ඔඛෙන් සෘජුව දේශපාලනයට යොමුවීමට තරුණ පිරිසට අවශ්ය වී ඇත¡ එ අනුව ලබන 15 වන දින පැවැත්වීමට නියමිත වනාතවිල්ලූව ප්රාදේශිය සභාවේ දියවැය සදහා වන ඡන්ද විමසීම පරාජය කිරීම සදහා අපේ තරුණ පිරිස දේශපාලන පිටියේ උත්සහ කරමින් සිටිති.
ප්රාදේශිය සභාවේ මන්ත්රීවරුන් හමුවී ජනතා හැගීම්වලට ගරු කරමින් ඊලග සභා වාරයේදී පැවැත්වීමට නියමිත අයවැය පිළිබද ඡන්ද විමසීමේ දී මහජන නියොජිකයින් ලෙස විරුද්ධව ඡන්දය දිය යුතු බව ද අපෙන් අහිමිවී ගිය සභාපති ධූරය නැවත ලබා ගන්නා මෙන් ද තරුණ පිරිසකයින්ගෙන් කාරුණිකව ඉල්ලා සිටින ලදි.
මහජන නියෝජිකයින් මහජන හැගීම්වලට ගරුකරමින් ජනතා අවශ්යතා ඉටුකළ යුතු අතර තමන් තෝරා පත් කළ ජනතාවගේ හැගීම් නොසලකන පකෂවල නායකත්වයට වහල් වීම වහාම නිවැරදිකළ යුතු බව එම පිරිස පැවසුහ.
එළඛෙන සභාවේ දී දියවැය පිළිබද ඡන්ද විමසිමේ දී මහජන හැගීම්වලට ගරු කරමින් විරුද්ධව ඡන්දය දෙනු ඇතැයි අපි විශ්වාස කරමු.
https://www.facebook.com/CleanNationLanka/posts/1213542955724068

பிரதேச சபையின் உறுப்பினர் ஏ.ஜே.எம். ரிபாfய் உடனான சந்திப்பு

தூய தேசத்திற்கான அமைப்பினர் புத்தளம் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஜே.எம். ரிபாfய் Ajm Rifai அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார்கள்.
கடந்த புத்தளம் பிரதேச சபையின் உள்ளுராட்சி தேர்தல்களின் போது பிரதித்தலைவர் பதவியை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட சகோதரர் ரிபாfய் அவர்களின் அரசியல் போராட்டம் தேர்தலில் வெற்றிபெற்றாலும், தேர்தலுக்குப் பின்னால் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களால் மற்ற கட்சிக்குத் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டதன் மூலம் தோல்வியடைந்தது என்பதை அத்தேர்தலில் முழுமூச்சாக மர்ஹும் கே.ஏ.பாயிஸ் அவர்களோடு வேலை செய்தவர்கள் என்ற வகையில் நாம் அறிவோம்.

அந்த வகையில் சகோதரர் ரிபாfய் அவர்கள் ஆரம்பித்த போராட்டம் தொடரவேண்டும் என்றும் அவருடைய அரசியல் அதிகாரம் இந்த பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வாக எதிர்காலத்திலும் அமைய வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தினோம். தூய தேசம் என்ற வகையில் நமது இயக்கம் பற்றியும் அதன் கொள்கை பற்றியும் விரிவாகக் கலந்துரையாடிய பின்னர் அடுத்த உள்ளுராட்சி சபை தேர்தலை நம் இயக்கத்திலிருந்து முகங்கொடுக்க வேண்டும் என்ற அழைப்பையும் கௌரவமாக விடுத்தோம்.

புத்தளம் கடற்கரை மண்ணுக்கு உள்ள அதே வரவேற்போடும், வஞ்சகம் இல்லாத புன்னகையோடும் மனம் திறந்து சுமார் 2 மணித்தியாலங்கள் உப்புக்கலந்த கடல் காற்றைச் சுவாசித்தவாறு கலந்துரையாடல் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. #CleanNation #Puttalam #Future #Unity
https://www.facebook.com/CleanNationLanka/posts/1197110947367269

Proposed 10 Important Reforms

தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து யோசனைகளைப் பெற்ற எடுப்பதற்காக, பொதுமக்களுக்கு ஓர் சந்தர்ப்பம் தேர்தல் சட்ட மறுசீரமைப்பு பற்றிய பாராளுமன்ற விஷேட குழுவினால் ஜூன் 19ஆம் திகதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த அடிப்படையில் புத்தளத்தில் இயங்கிவருகின்ற தூய தேசம் என்ற இயக்கத்தினால், இலங்கை மக்களின் நலன் கருதி முக்கியமான 10 சீர்திருத்தங்கள் எழுத்து மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த ஆவணம் ஜூன் 17ஆம் திகதி தேர்தல் சட்ட மறுசீரமைப்பு பற்றிய பாராளுமன்ற விசேட குழுவின் செயலாளர் திருமதி குஷானி ரோஹனதீர அவர்களிடம் மின்னஞ்சல் மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
தேர்தல் காலங்களில் கட்சிகளால் செலவிடப்படும் பணத்தின் தொகை கட்டுப்படுத்தப்பட வேண்டும், மாகாணசபை தேர்தல் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், இலத்திரனியல் முறையில் தேர்தல் நடத்துவதற்கும் வாக்குகளை எண்ணுவதற்குமான திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும், கட்சிகளுக்கு உரிய தேசியப்பட்டியல் நியமனம் தேர்தல் முடிந்த கையோடு இடம் பெற வேண்டும் போன்ற விடயங்கள் அடங்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டது.
මැතිවරණ නීති ප්රතිසංස්කරණ පිළිබඳ පාර්ලිමේන්තු විශේෂ කමිටුව විසින් මැතිවරණ නීති ප්රතිසංස්කරණ සම්බන්ධයෙන් මහජනතාවගෙන් අදහස් විමසීමට අවස්ථාවක් ලබා දෙන ලදී. මැතිවරණ නීති සහ මැතිවරණ ප්රතිසංස්කරණ පිළිබඳ යෝජනා ඉදිරිපත් කිරීම සඳහා මහජනතාවට ජුනි 19 දක්වා කාලය ලබා දී තිබුණි.
එම පදනම මත පුත්තලමේ ක්රියාත්මක වෙමින් පවතින පවිත්ර ජාතියක් නම් ව්යාපාරය මගින්, ශ්රී ලංකාවේ ජනතාවගේ යහපත උදෙසා ඉතා වැදගත් ප්රතිසංස්කරණ 10 ක් ලිඛිතව යෝජනා කර තිබේ. මෙම ලේඛනය ජුනි 17 වන දින මැතිවරණ නීති ප්රතිසංස්කරණ පිළිබඳ පාර්ලිමේන්තු විශේෂ කමිටුවේ ලේකම් කුෂානි රොහානාදීරා මහත්මිය වෙත විද්යුත් තැපෑලෙන් යවා ඇත.
මැතිවරණ කාලවලදී පක්ෂ විසින් වියදම් කරනු ලබන මුදල් ප්රමාණය පාලනය කළ යුතුය, පළාත් මැතිවරණය මුළුමනින්ම අහෝසි කළ යුතුය, මැතිවරණ සහ ඡන්ද ගණන් කිරීම විද්යුත් ක්රමයකින් කිරීමට සැලැස්මක් ක්රියාත්මක කළ යුතුයි, ජාතික පක්ෂ ලැයිස්තුවක් පත් කිරීම මැතිවරණ අවසන් වූ වහාම සිදු කළ යුතුයි යන කරුණු ඉදිරිපත් කරන ලදී.
An opportunity was provided to the general public by the Parliamentary Special Committee on Electoral Law Reform to solicit ideas that to be made in Sri Lanka’s current electoral system, structure and election laws!
The general public was requested to submit their proposals on electoral laws and electoral reforms before June 19th. On that basis, the Clean Nation Movement in Puttalam has  for the benefit of the people of Sri Lanka as whole! This document was emailed to Mrs. Kushani Rohanadeera, Secretary of Parliament of Sri Lanka Parliamentary Special Committee on Electoral Law Reform on June 17.
Proposals which included the need to control the amount of money spent by parties during election periods, to abolish provincial elections completely, to implement a plan to conduct elections electronically and to count the votes, to appoint the appropriate national list for the parties after the election!
An Inclusive initiative to highlight the need of the nation! #CleanNation #Politics #MP2025 #ElectionReforms #PublicOpinion #Puttalam

தனி மனித பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது நாகரிகமான செயல் அல்ல

அண்மைய தினங்களில், புத்தளம் தில்லையடி பிரதேசத்தில் இந்து ஆலயம் ஒன்றில் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்ட போது, ஒரு முஸ்லிம் பெண்மணி, புத்தள முஸ்லிம் சமூகம் குறித்து தெரிவித்த தனிப்பட்ட கருத்து ஒன்று காணொளியாக வெளிவந்து புத்தள சமூகத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

 

அந்த வகையில் மேற்படி காணொளியில் தோன்றிய, தனது சமூகம் குறித்து விரக்தி நிலையில் காணப்பட்ட பெண்மணியுடன் கலந்துரையாடி விளக்கங்கள் வழங்கப்பட்ட அதேவேளை, குறித்த பெண்மணி தனது செயல் குறித்து வருந்துவதாகவும், தனது பொறுப்பற்ற செயலின் மூலம் புத்தள முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்பட்டுள்ள இழுக்குக்காக மன்னிப்பு கேட்பதாகவும் எதிர்வரும் காலங்களில் அவ்வாறான தவறுகள் நடக்காமல் இருக்க தான் பொறுப்பு கூறுவதாகவும் தெரிவித்து உள்ளார். இந்த விடயத்தில், குறித்த பெண்மணியின் செயலுக்கு காரணமாக அமைந்த மனித மனதின் பலவீனங்களை புரிந்துணர்வு கொண்டு அவரது மன்னிப்பு கோரலை ஏற்றுக்கொள்வோம்.
மேற்படி, தவறுகள் சில நிகழ்ந்த போதும், குறித்த இந்து ஆலயத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் மனித நேய செயற்பாடுகளை நாம் ஆதரிப்பதுடன் மேற்படி செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறவேண்டும் என்பதுவே எமது அவாவுமாக இருக்கின்றது. ஒரு இந்து அலாயம் என்ற வகையில், உங்களது ஆலயத்தினால் வழங்கப்படும் உலர் உணவுப்பொதிகளை தமது வறுமையின் காரணமாக வாங்க வந்த எளிய மக்களின் உணர்வுகளை, இவ்வாறான காணொளியின் மூலம் சமூக வலைத்தளங்களில் சமூகமயப்படுத்துவது என்பது சற்றும் ஏற்புடைய விடயம் அல்ல என்பதையும், தனி மனித பிரச்சினைகளை பொதுவெளியில் பேசுவது நாகரிகமான செயல் அல்ல என்பதையும் குறிப்பிட்டு தெளிவான கடிதம் ஒன்று தில்லையாடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் குருக்கள் மரியாதைக்குரிய தியாகராஜ அவர்களுக்கு ஒரு தெளிவான விளக்கத்தின் பிற்பாடு நம் அமைப்பின் முக்கிய பொறுப்புக்களை சுமக்கும் சகோதரர் பவ்ஸான் Mohamed Fawsan அவர்களால் கையளிக்கப்பட்டது.
இந்த கடிதத்தின் பிரதி ஒன்று புத்தளம் மாவட்ட சர்வம் மத குழுவிற்கு, அவ்வமைப்பின் சமத்தலைவர் புத்தளம் சித்திவிநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்களிடம் தூய தேசத்திற்கான இயக்கத்தினால் கையளிக்கப்பட்டது. #CleanNation #Puttalam #lk #2025MP #Unity #Diversity #Peace

ஒரு அவசர தேவையை செய்து கொடுத்துள்ளோம்

சீனாவைவிட கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டது இத்தாலி தான். சொன்ன பேச்சை கேட்காமல் இத்தாலி மக்கள் அசால்ட்டாக இருந்ததால் ஏராளமான இழப்புகளை சந்தித்து வருகிறது. இத்தாலியில் கொத்து கொத்தாக விழும் மரணத்தை கண்டு உலக நாடுகளே பயந்துவிட்டன. அப்போதுதான் மனித உயிர்களை காக்க வேண்டும் என்பதற்காக கியூபா இத்தாலிக்கு தானாகவே வலிய சென்று உதவிகளை செய்ய தொடங்கியது.
பிறருக்கு உதவிகளை அளித்து உயிர்காக்கும் அளவுக்கு கியூபா ஒன்றும் பணக்கார நாடு இல்லை. இன்னமும் ஓர் ஏழை நாடுதான். ஆனால் ஒரு சில குறிக்கோள்களை வகுத்து அதற்குள் பயணித்து வருகிறது. உதவி செய்வதற்கு பணக்காரர்களாக இருக்கத்தேவையில்லை என்பதுதான் அடிப்படை. அதற்கு சிறந்த உதாரணம் கியூபா.
அந்த அடிப்படையில் புத்தளத்தில் இருக்கும் தூய தேசத்தை நோக்கி நகரும் சமூக பற்றாளர்கள் என்ற வகையிலேயே மருத்துவத்திற்கு தம்மால் முடியுமான ஒரு அவசர தேவையை அவசரமாக செய்து கொடுத்துள்ளோம். இந்த நிதியுதவியை அமைப்பின் பிரதித்தலைவர் சகோதரர் நஸீப் Naseef Awm மற்றும் சமூக விவகார பொறுப்பாளர் சகோதரர் பஸாம் Firdous Mohamed Fasam அவர்களும் இந்த உதவியினை புத்தளம் தள வைத்தியசாலைக்கு இன்று காலை கையளித்தார்கள்.
இந்த உதவியை முன் நின்று செய்த சமூக ஆர்வலர் சகோதரர் இபாம் மரிக்கார் Ifam Marikar அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். #CleanNation #lka #MP2025 #HealthCare